எதிர்வரும் 26 ஆம் திகதி திங்கட்கிழமை விசேட அரச விடுமுறை தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
உள்நாட்டலுவல்கள் அமைச்சில் இன்று நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் மாநாட்டில், பொதுநிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சரான பிரதமர் தினேஷ் குணவர்த்தன இதனைத் தெரிவித்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை 25 ஆம் திகதி கிறிஸ்மஸ் தினம் கொண்டாடப்படும் நிலையில், மறுநாள் விசேட அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்றைய தினம் (26) ஆழிப்பேரலை (சுனாமி) நினைவேந்தல் தினம் என்பதும் குறிப்பிடத்தக்கது.