Saturday, May 18, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை தொழிலாளியின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டிய இராணுவச் சிப்பாய்!

தொழிலாளியின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டிய இராணுவச் சிப்பாய்!

1 minutes read

யாழ்., காரைநகர் – சாம்பல் ஓடை கடற்கரைப் பகுதியில் கருவாடு உலர விட்டுக் கொண்டிருந்த தொழிலாளி ஒருவரின் கழுத்தில் இராணுவச் சிப்பாய் ஒருவர் கத்தியை வைத்து மிரட்டியுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

சாம்பல் ஓடை கடற்கரையில் இன்று கருவாட்டைத் தொழிலாளி ஒருவர் உலர வைத்துக்கொண்டிருந்த வேளை அப்பகுதிக்கு வந்த இராணுவச் சிப்பாய் ஒருவர் தொழிலாளியின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி விட்டுச் சென்றுள்ளார்.

சம்பவம் தொடர்பில் குறித்த தொழிலாளி, காரைநகர் கடற்றொழிலாளர் சங்கத்தூக்கும் அப்பகுதி கிராம சேவையாளருக்கும் தெரியப்படுத்தியுள்ளார்.

இந்தச் சம்பவத்தைத் தாம் வன்மையாகக் கண்டிக்கின்றனர் என்றும், சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் காரைநகர் கடற்றொழிலாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More