Saturday, May 18, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை யாழில் நடந்த துயரம்

யாழில் நடந்த துயரம்

1 minutes read

இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, மாதகல் கடற்பகுதியில் இன்று (22) வியாழக்கிழமை ஆண் ஒருவரது சடலம் கரையொதுங்கியது.

இது குறித்து மேலும்  தெரியவருவதாவது 

யாழ்ப்பாணம் பலாலி அன்ரனிபுரம் பகுதியிலிருந்து கடற்றொழிலுக்கு சென்ற 54 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தை ஒருவர் கடந்த 20ஆம் திகதி  அன்று காணாமல் போயிருந்தார்.

காணமல்போன கடற்றொழிலாளரை அப்பகுதிமக்கள் தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனர்.

காணாமல்போன கடற்தொழிலாளரின் படகு மீட்கப்பட்ட நிலையில் அவரை தேடும் நடவடிக்கைகள் இடம்பெற்றுவந்தன.

இந்நிலையில் குறித்த நபரே  மாதகல் கடலில் சடலமாக மீட்கப்பட்டார். மீட்கப்பட்ட சடலம் பிரதேச பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது.

இராயப்பு ரொபேட் கெனடி என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இது குறித்து இளவாலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More