கிளி மக்கள் அமைப்பின் ஒரு மில்லியன் கற்பகா திட்டத்தின்கிழ் இன்றய தினம் பயன் தரு மரங்கள் தென்னைமர பாமடி (கரடி போக் வீதி) மகிழங்காடு பகுதியில் சிறப்பாக நடைபெற்றது.
இன்நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக கிளிநொச்சி மாவட்ட கமநல அபிவிருத்தி பிரதி ஆணையாளர் திரு பா. தேவரதன் அவர்களும் கிளிநொச்சிமாவட்ட நீர்பாசன பொறியியலாளர் திரு . ச. செந்தில் குமரன் அவர்களும் கலந்து கொண்டு மரங்களை நாட்டி மரநடுகை நிழ்வை ஆரம்பித்து வைத்தார்கள்.
மேலும் இந்நிழ்வில் கிளிநொச்சி மகிழங்காட்டு காமக்கார அமைப்பு, இலங்கை செஞ்சிலுவை சங்கம் கிளிநொச்சி, இரணைமடு கமக்கார அமைப்பு சம்மேளனம், கிளிநொச்சி மாவட்ட துடுப்பாட்ட சங்கம், கல்வி கலாச்சார அபிவித்தி மையம், கிளிநொச்சி மாவட்ட சாரணர் சங்கம், என்பவற்றின் உறுப்பினர்கள் உட்படப் பலர் கலந்து கொண்டு சிறப்பான பங்களிப்பினை வழங்கியது மட்டுமின்றி மரங்களை நாட்டியும் வைத்தனர்.
அத்துடன் கிளிநொச்சிமாவட்ட சுற்றுசூழல் அதிகாரியும் கிளிநொச்சி கமநல சேவை அதிகாரியும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.