Monday, May 6, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை யாழ் பல்கலையில் திருவெம்பாவை பாராயணம்

யாழ் பல்கலையில் திருவெம்பாவை பாராயணம்

1 minutes read

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களினால் துணைவேந்தர் பேராசிரியர் சிறிசற்குணராஜாவின் வழிகாட்டலில் மூன்றாவது வருடமாகவும் திருவெம்பாவை பாராயணம் இன்றைய தினம் புதன்கிழமை(28) திருவெம்பாவை விரதத்தின் முதலாம் நாளில் முன்னெடுக்கப்ட்டது.

யாழ் பல்கலைக்கழக பரமேஸ்வரா ஆலய  முன்றலில் இருந்து ஆரம்பமான திருவெம்பாவை பாராயணம் இராமநாதன் வீதியூடாக கலட்டி சந்தியினை அடைந்து பாலசிங்கம் விடுதி ஊடாக தபால் பெட்டி சந்தி – பரமேஸ்வரா சந்தியினை அடைந்து மீண்டும் பரமேஸ்வரா முன்றலில் பாராயணம் முடிவுற்றது.

இதன்பொழுது குறித்த பகுதிகளில் உள்ள ஆலயங்களையும் தரிசித்த வண்ணம் பாராயணம் முன்னெடுக்கப்பட்டது.

தொடர்ச்சியாக பத்து நாட்களும் மாணவர்கள் பாராயணம் முன்னெடுக்கப்பட்டு இறுதி நாள் மாணிக்கவாசகர் எழுந்தருளி திருவெம்பாவை முற்றுபெறவுள்ளது.

மேலும் எதிர்வரும் ஜனவரி ஐந்தாம் திகதி திருவெம்பாவையை  முன்னிட்டு மார்கழி பெருவிழாவும் கலைப்பீட மாணவர் ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More