Tuesday, May 7, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை சிறுமியைக் கண்டுபிடிக்கப் பொதுமக்களின் உதவியை நாடிய பொலிஸ்!

சிறுமியைக் கண்டுபிடிக்கப் பொதுமக்களின் உதவியை நாடிய பொலிஸ்!

1 minutes read

2022 ஆம் ஆண்டு ஒக்டோபர் 13 ஆம் திகதி முதல் காணாமல்போன கெங்கல்லை, அம்பகோட்டே பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய பாடசாலை மாணவியைக் கண்டுபிடிக்கப் பொலிஸார், பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

15 வயதுடைய சிறுமி பாடசாலை முடிந்து வீடு திரும்பவில்லை எனச் சிறுமியின் உறவினர்கள் தெல்தெனிய பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சிறுமி பாடசாலையை முடித்து விட்டு பாடசாலையைச் சேர்ந்த மற்றுமொரு சிறுமியுடன் ரயிலில் கொழும்பு நோக்கிப் பயணித்துள்ளார் என்று ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

மற்றைய சிறுமியை ரயிலில் இருந்த இளைஞர் ஒருவரே பெற்றோரிடம் ஒப்படைத்த வேளை இந்தச் சிறுமி காணாமல்போன விடயம் தெரியவந்தது.

இந்தச் சிறுமியைக் கண்டால் கீழ்வரும் தொலைபேசி இலக்கங்கள் மூலம் தெரியப்படுத்துமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

  • தெல்தெனிய பொலிஸ் – 081-2374073
  • தெல்தெனிய ஓ.ஐ.சி. – 071 – 8591066

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More