இலங்கையின் 75ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் கொழும்பு – காலிமுகத்திடலில் இன்று இடம்பெறுகின்றன.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்த்தன ஆகியோரின் தலைமையில் இன்றைய நிகழ்வுகள் நடைபெறுகின்றன.
இந்த நிகழ்வுகளில் வெளிநாட்டு இராஜதந்திரிகள் பலர் பங்கேற்றுள்ளனர்.
அதேநேரம், இந்த முறை சுதந்திர தின நிகழ்வுகளில் 3 ஆயிரத்து 284 இராணுவத்தினர், 179 யுத்த வாகனங்கள், 867 கடற்படையினர் மற்றும் அவர்களது 52 வாகனங்களும் பயன்படுத்தப்படுகின்றன.
வான் படையின் 695 உத்தியோகத்தர்களும், 336 பொலிஸ் உத்தியோகத்தர்களும் சுதந்திர தின நிகழ்வுகளில் பங்கேற்கின்றனர்.
அத்துடன் பொலிஸ் விசேட அதிரடிப் படையைச் சேர்ந்த 220 பேரும் இன்றைய சுதந்திர நிகழ்வுகளில் இணைந்துள்ளனர்.