நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரகரி வாவியிலிருந்து ஆணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டது என்று நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
சடலமொன்று மிதப்பதைக் கண்டு பிரதேசவாசிகள் நுவரெலியாப் பொலிஸாருக்கு அறிவித்தனர். அதன்பின் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டது.
மீட்கப்பட்ட சடலம் இதுவரை யாருடையது என அடையாளம் காணப்படவில்லை.
சடலம் உருக்குலைந்த நிலையில் இருப்பதால் அது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த நபர் வாவியில் பாய்ந்து உயிரிழந்தாரா அல்லது எவராவது கொலை செய்துவிட்டு வாவியில் வீசிவிட்டுச் சென்றார்களா என்பது தொடர்பில் பலகோணங்களில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மரண விசாரணைகளின் பின் சடலம் வைத்திய பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.