0
மாத்தறையில் கடலில் நீராடச் சென்ற பாடசாலை மாணவர்கள் மூவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
அவர்களின் சடலங்கள் கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளதால் சடலங்களை மீட்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்று மாத்தறை பிரதேசத்துக்குப் பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கடற்படையினரின் ஒத்துழைப்புடன் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.