கொழும்பில் இன்று முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணியின் மீது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதலின் போது 28 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.
உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துமாறு கோரி தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டப் பேரணி முன்னெடுக்கப்பட்டது.
இதனால், கொழும்பு தாமரைத் தடாகம் முதல் நகர மண்டபம் வரையான வீதியில் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.
இந்தநிலையில், ஆர்ப்பாட்டத்தை கலைக்கப் பொலிஸாரால் நீர்த்தாரைப் பிரயோகம் மற்றும் கண்ணீர்ப்புகைக் குண்டு வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது காயமடைந்த 28 பேரே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.