வடக்கு மாகாண கடற்தொழிலாளர் சமாசங்கள் சங்கங்கள் இணைந்து இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் ஒரு சிறப்பு கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்து அந்த கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பாக இன்றைய பத்திரிகையாளர் சந்திப்பும்!
23 க்கும் மேற்பட்ட சங்கம் சமாசஙலகள் கலந்து கொண்டு கடந்த வாரம் பாராளுமன்றத்திலே இலங்கையின் வெளிவிவகார அமைச்சினால் இந்திய படகுகளுக்கு அனுமதி வழங்குவது தொடர்பான பிரச்சினை தொடர்பாக ஆராயப்பட்டு அதன் முடிவுகள் விடப்பட்டிருக்கின்றன அந்த வகையிலே அதன் முடிவை முதலாவதாக நாங்கள் அதிமேதகு ஜனாதிபதி அவர்களுக்கு எங்களுடைய வடக்கு கடற் தொழிலாளர்களின் கடலை பாதுகாப்பது தொடர்பாக அதி மேதகு ஜனாதிபதி அவர்களுக்கு ஒரு கடிதத்தை எழுதி பாராளுமன்ற உறுப்பினராக நாங்கள் அனுப்புவதற்கு தீர்மானித்துள்ளோம்.
கடிதம் வடக்கு மாகாண கடற்தொழிலாளர்கள் யாழ்ப்பாணம் கிளிநொச்சி முல்லைத்தீவு மன்னார் 2023 ஆம் ஆண்டு இரண்டாம் மாதம் 26ஆம் திகதி கௌரவ ஜனாதிபதி ஜனாதிபதி அலுவலகம் கொழும்பு 1-வடக்கு கடற்றொழிலாளர்களின் தாழ்மையான கோரிக்கை கடந்த பல வருடங்களாக இலங்கை கடற்பரப்புக்குள் சட்ட விரோ தொழிலில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் தொடர்பாக வழக்குகள் கடற்றொழிலில் சமூகம் பல்வேறு போராட்டங்களை நடாத்தி வந்த நிலையில் கடந்த ஆட்சிக் காலத்தில் தாங்கள் பிரதமராக கடந்த ஆட்சிக் தாங்கள் பிரதமராக பதவி வகித்த காலப்பகுதியில் 2016ஆம் ஆண்டு அமைச்சு மட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்திய இலங்கை மீனவர் பேச்சு வார்த்தையில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை நிறைவேற்றி முன் கொண்டு சென்று நிரந்தரத் தீர்வை வழங்குவீர்கள் என நாம் எதிர்பார்த்தோம்.
கடந்த வாரம் பாராளுமன்றத்தில் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் இந்தியக் கடற் தொழிலாளர்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பான கருத்து தெரிவித்திருந்தார். இந்த நடைமுறை படகுகளை தொழிலாளருக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது இந்திய இழுவைப் படகுகளால் எங்களுடைய கடல் வளமும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு பல கோடி ரூபாய் சொத்துக்கள் அமைக்கப்பட்டு தங்களுடைய வாழ்வாதாரத்தை முன்கொண்டு செல்ல முடியாமல் உள்ளது எனவே எமது கடற்பகுதி இந்திய மீனவர்களை அனுமதிப்பது தொடர்பாக அதிமேதகு ஜனாதிபதி அவர்களுடன் நேரில் சந்தித்து கலந்துரையாட ஆவலாய் உள்ளோம் எனவே இலங்கையில் உள்ள கடற்பகுதியில் வெளிநாட்டு கடற்தொழிலாளர்கள் அழிப்பதையும் மேல்நிலை செய்யுமாறு வடக்கு மாகாண கடற்றொழிலாளர் சார்பாக நாங்கள் இலங்கையின் அதிமேதகு ஜனாதிபதி அவர்களை வேண்டி நிற்கின்றோம். கடிதத்தினை இன்று நாங்கள் ஜனாதிபதிக்கு அனுப்ப முடிவு செய்து உள்ளோம்.
எனவே வடக்கு கடற் தொழிலாளர்கள் பிரச்சினை தொடர்பாக நாங்கள் ஜனாதிபதிக்கு நேரடியாக சென்று கலந்துரையாட வேண்டும் என்ற கோரிக்கையை இன்றைய கூட்டப்பட்ட நான்கு மாவட்டங்களிலும் இணைந்து கூட்டப்பட்ட கூட்டத்தில் முடிவு எட்டப்பட்டு உள்ளது.
———————————————
அ. அன்னராசா,
அகில இலங்கை தொழிலாளர் கூட்டமைப்பின் தலைவர் NV.சுப்பிரமணியம்,
கிளிநொச்சி சம்மேளனத் தலைவர் ஜோசெப் பிரான்சிஸ்.
மன்னார் முகமட் ஆலம்.
வடமாகாண கடற்றொழிலாளர் இணையத் தலைவர் ந.ஐங்கரன்.