Tuesday, April 30, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை சட்டவிரோத மீன்பிடிக்கு எதிர்ப்பு – திருமலையில் போராட்டம்

சட்டவிரோத மீன்பிடிக்கு எதிர்ப்பு – திருமலையில் போராட்டம்

0 minutes read

சட்டவிரோத வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அதைத் தடை செய்யக் கோரியும் திருகோணமலையில் உள்ள மீனவர்களால் இன்று காலை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணி முன்னெடுக்கப்பட்டது.

சிறிமாபுரத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட பேரணி திருக்கடலூர் வழியாக ஏகாம்பரம் வீதியூடாக வந்து திருகோணமலை – கண்டி பிரதான வீதியிலுள்ள மாவட்ட கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்துக்கு முன்பாக வந்தடைந்தது. அங்கு மீனவர்கள் பதாகைகளை ஏந்தியவாறு வீதியில் நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது திருகோணமலை மாவட்டத்தில் 176  பேருக்கு வழங்கப்பட்ட சுருக்கு வலை அனுமதியை இரத்துச் செய்ய வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்தச் சுருக்கு வலையால் கடல் வளம் அழிந்து போகின்றது எனவும், மீனவர்களின் தொழில் அற்றுப் போகின்றது எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கவலை தெரிவித்தனர்.

இந்த விடயம் தொடர்பில் அரச அதிகாரிகள் தெரிந்திருந்தும் எதுவித சட்ட நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More