December 10, 2023 5:17 pm

ஒலுவிலில் மின்னல் தாக்கி குடும்பஸ்தர் சாவு!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

அம்பாறை மாவட்டம், ஒலுவிலில் மின்னல் தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே சாவடைந்துள்ளார். அதேவேளை, பாதிப்புக்குள்ளான மூவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஒலுவில் வெளிச்ச வீட்டுக்கு அருகாமையில் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த வேளையில் இவர்கள் மின்னல் தாக்கத்துக்குள்ளாகியுள்ளனர்.

ஒலுவில் 2 ஆம் பிரிவைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான சுபைதீன் நிஜாமுதீன் (வயது 34) எனும் குடும்பஸ்தரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

மின்னல் தாக்கத்துக்குள்ளான ஏனைய மூவருமான ஒலுவில் 7 ஆம் பிரிவைச் சேர்ந்த இல்முடீன் (வயது 32), ஒலுவில் 2 ஆம் பிரிவைச் சேர்ந்த எஸ். எம் அஹமட் (வயது 50), ஒலுவில் 4 ஆம் பிரிவைச் சேர்ந்த கே.அஸ்மின் (வயது 36) ஆகியோர் ஒலுவில் பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்