Monday, May 6, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இலங்கை அரசியலில் கொழுந்துவிட்டு எரியும் டயானா கமகே எம்.பி விவகாரம்!

இலங்கை அரசியலில் கொழுந்துவிட்டு எரியும் டயானா கமகே எம்.பி விவகாரம்!

1 minutes read

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய் பெரேரா, தன்னை தாக்கியதாக பாராளுமன்ற உறுப்பினர் டயானா கமகே இன்று (20) சபைக்கு வந்து தெரிவித்தார்.

இது பாரதூரமான சம்பவம் எனவும் இது தொடர்பில் விசாரணை நடத்த பாராளுமன்றத்தை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் எனவும் பிரதமர் தினேஷ் குணவர்தன கேட்டுக்கொண்டார்.

இதனையடுத்தே, சபை நடவடிக்கைகள் 10 நிமிடங்களுக்கு இன்று மாலை ஒத்திவைக்கப்பட்டன.

விசாரணைக்கு உத்தரவு; குழு நியமனம்

பாராளுமன்ற வளாகத்துக்குள் இடம்பெற்றதாக கூறப்படும் குறித்த சம்பவம் தொடர்பில் விசேட விசாரணைக்கு சபாநாயகர் உத்தரவிட்டார்.

அதற்காக பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தலைமையில் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

வெளிவந்த வீடியோ

இந்நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் டயானா கமகேவுக்கும், பாராளுமன்ற உறுப்பினர் ரோஹண பண்டாரவுக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தை தணிக்க முயன்ற பாராளுமன்ற உறுப்பினர் சுஜித் பெரேராவை டயானா தாக்க முற்படும் காணொளியொன்றும் வெளியாகியுள்ளது.

குறித்த வீடியோவை அங்கிருந்த ஒருவர் பதிவுசெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய மக்கள் சக்தியின் இளைஞர் அணியின் துணை தவிசாளர் ரெஹான் ஜெயவிக்ரம இந்த வீடியோவை எக்ஸ் (டுவிட்டர்) சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More