Sunday, May 5, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை என்றும் மரணிக்காத காசாவின் குரல்- ரிவாட் அலாரீர் | ஐங்கரன் விக்கினேஸ்வரா

என்றும் மரணிக்காத காசாவின் குரல்- ரிவாட் அலாரீர் | ஐங்கரன் விக்கினேஸ்வரா

4 minutes read

காசா பல்கலை பேராசிரியர் இஸ்ரேலால் படுகொலை !
——————————————————
– ஐங்கரன் விக்கினேஸ்வரா

இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் கொல்லப்பட்ட கவிஞர், பேராசிரியர் Dr.ரிவாட் அலாரீரை (Dr. Refaat Alareer) உலகம் வாழ் கவிஞர்களும், பாலஸ்தீனியர்களும் இரங்கல் தெரிவிக்கின்றனர். புகழ்பெற்ற கவிஞர், கல்வியாளர் காசாவின் குரலாக என்றும் மரணிக்காத குரலாக விளங்கியவர்.

என்றும் மரணிக்காத காசாவின் குரல் :
பாலஸ்தீனக் கவிஞரும், காசாவிலுள்ள பல்கலைக்கழகப் பேராசிரியருமான ரிவாட் அலாரீர் (Refaat Alareer) கடந்த புதன் இஸ்ரேல் காசா மீது நடத்திய குண்டுத்தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார். அவருடன் சேர்ந்து அவரது குடும்பத்தவர்கள் பலரும் கொல்லப்பட்டுள்ளனர்.
இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் கொல்லப்பட்ட பேராசிரியர் ரிவாட் அலாரீர் இஸ்ரேலின் பலத்த குண்டுத்தாக்குதல்களுக்கு மத்தியிலும் காசாவை விட்டு நீங்காமல் அங்கேயே தங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
1979 இல் காசா நகரத்தில் உள்ள ஷுஜாயில், புகழ்பெற்ற பாலஸ்தீனக் கவிஞரும், காசாவிலுள்ள இஸ்லாமியப் பல்கலைக்கழகப் பேராசிரியருமான ரிவாட் அலாரீர் பிறந்தார். காசாவில் வளர்ந்த அவர், நான் எடுக்கும் ஒவ்வொரு அசைவும் மற்றும் நான் எடுத்த ஒவ்வொரு முடிவும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பால்  பொதுவாக எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியது என்று கூறியுள்ளார்.
ரிவாட் அலாரீர் 2001 இல் காசா பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்தில் BA பட்டமும், 2007 இல் லண்டன் பல்கலைக்கழக கல்லூரியில் MA பட்டமும் பெற்றார். அவர் புத்ரா மலேசியா பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.
காசா பல்கலைக்கழக பேராசிரியர்:
2015இல் காசா அன் சைலன்ஸ், பின்னர் காசா ரைட்ஸ் பேக் 2014 இல் பாலஸ்தீனிய சிறுகதைகளின் இரண்டு தொகுதிகளைத் தொகுத்துள்ளார். ஒரு நேர்காணலில் அவர் கூறுகையில் காசா ரைட்ஸ் பேக் நூல் எதிர்கால சந்ததியினருக்கு ஒரு சாட்சியத்தை வழங்குவதற்கான முயற்சியாகும் என தெரிவித்துள்ளார்.
2007இல், காசாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் ரிவாட் அலாரீர் பேராசிரியரானார். அங்கு அவர் உலக இலக்கியம் மற்றும் படைப்பாற்றல் இலக்கியத்தை கற்பித்தார். வி ஆர் நாட் நம்பர்ஸ் ( WE are not numbers ) என்ற அமைப்பை அவர் இணைந்து நிறுவி, காசாவில் உள்ள எழுத்தாளர்களை வெளிநாட்டில் உள்ளவர்களுடன் இணைக்கும் வழிகாட்டல் திட்டமாகும்.
2023 இஸ்ரேல்-ஹமாஸ் போரின் போது, பிபிசி, டெமாக்ரசி நவ், மற்றும் ஏபிசி நியூஸ் ஆகிய ஊடகங்களில் பணியாற்றினார். 2023 இல் ஹமாஸ்க்கு எதிரான இஸ்ரேல் தாக்குதலுக்குப் பிறகு, அவர் இந்தத் தாக்குதலை  சரியாக “வார்சா கெட்டோ” எழுச்சியைப் போன்றது என்று கூறியமை பலத்த சர்ச்சயை உருவாக்கியது.
2021 இஸ்ரேல்-பாலஸ்தீன நெருக்கடியின் போது அதில் அவரும் அவரது மனைவியும் 30க்கும் மேற்பட்ட உறவினர்களை இழந்துவிட்டதாக விவரித்தார்.
நான் இறக்க வேண்டும் என்றால்
நம்பிக்கை தரட்டும்
அது ஒரு கதையாக இருக்கட்டும்..
பல வார கொலை மிரட்டலுக்கு பின் கொலை:
யூரோ-மெட் மானிட்டர் (Euro-Mediterranean Human Rights Monitor (Euro-Med Monitor)  அமைப்பு ஒரு அறிக்கையை வெளியிட்டது.  ரிவாட் அலாரீர் வேண்டுமென்றே குறிவைக்கப்பட்டதாகத் தெரிகிறது, தனது குடும்பத்தினருடன் இருந்த அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ள முழு கட்டிடத்திலும் வெடிகுண்டு வீசப்பட்டது.  உறுதிப்படுத்தப்பட்ட நேரில் கண்ட சாட்சிகள் மற்றும் குடும்பக் கணக்குகளின்படி, இஸ்ரேலிய தரப்புகளில் இருந்து அவருக்கு ஆன்லைனிலும் ஃபோன் மூலமாகவும் பல வாரகால கொலை மிரட்டல்களுக்கு உள்ளானார்.
கொல்லப்படுவதற்கு முன் தனது கடைசி நேர்காணலில், இஸ்ரேலிய குண்டுகள் பின்னணியில் வெடிக்கும் சத்தத்துடன், தன்னிடம் ஆயுதம் ஏதும் இல்லாத நிலையில், IDF தனது வீட்டிற்கு வந்தால் தன்னைத் தற்காத்துக் கொள்வேன் என்றும், தான் உதவியற்றவனாக உணர்ந்ததாகவும் கூறியுள்ளார்.
இஸ்ரேலிய வீரர்கள் காசாவின் சிறந்த கல்வியாளர்களில் ஒருவரை, சிறந்த மனிதனும், விலைமதிப்பற்ற காசாவின் குரலைக் குறிவைத்து, பின்தொடர்ந்து சென்று கொன்றனர் என கவிஞர் மொசாப் அபு தோஹா எழுதியுள்ளார். எனது இதயம் உடைந்து விட்டது, எனது நண்பரும் சக ஊழியருமான அலரீர் அவரது குடும்பத்தினருடன் கொல்லப்பட்டார்.
பாலஸ்தீனிய-அமெரிக்க பேராசிரியர் சாமி அல்-அரியன் கூறுகையில் அவர் ஒரு அற்புதமான கவிஞர், காசான்களுக்கு ஒரு தெளிவான குரல், பாலஸ்தீனத்திற்கு வெளியே உள்ள மக்களுக்கு ஒரு உண்மையான பாலம். பாலஸ்தீனத்திற்குள்ளும் உலகெங்கிலும் உள்ள பலரால் அவரது இழப்பை ஜீரணிக்க முடியாது என குறிப்பிட்டார்.
2014இல் காசா ரைட்ஸ் பேக் நூல் இத்தாலிய மொழியில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
வார்சா கெட்டோ எழுச்சி:
வடக்கு காசாவில் இஸ்ரேலிய நடவடிக்கைகள் தொடங்கியதைத் தொடர்ந்து அங்கிருந்து வெளியேற மறுத்து விட்டார். அவர் இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு அவர் சமூக ஊடகங்களில் வீடியோவை வெளியிட்டார். கட்டிடம் குலுங்குகிறது. குப்பைகள் மற்றும் துண்டுகள் சுவர்களில் மோதி தெருக்களில் பறக்கின்றன என்று அவர் எழுதினார். அத்துடன் இஸ்ரேல் மீதான ஹமாஸின் அக்டோபர் 7 தாக்குதலுக்குப் பிறகு பிபிசிக்கு அளித்த பேட்டியில், அதை “சட்டபூர்வமான மற்றும் தார்மீக” என்று கூறி பரவலான சர்ச்சையை ஏற்படுத்தினார். இது சரியாக வார்சா கெட்டோ எழுச்சியைப் போன்றது என்றும் அவர் கூறினார்.
வார்சா கெட்டோ எழுச்சி என்பது 1943 இல் ஜெர்மனியால் ஆக்கிரமிக்கப்பட்ட போலந்தில் நடந்த ஒரு கிளர்ச்சியாகும். மேலும் யூத மக்களை அழிப்பு முகாம்களுக்கு கொண்டு செல்வதற்கான நாஜி முயற்சிகளை எதிர்க்க யூதர்கள் கெட்டோவிற்குள் கடத்தப்பட்ட ஆயுதங்களைப் பயன்படுத்து போராடினர்.
2015 இல் நிறுவப்பட்ட பாலஸ்தீனிய இலாப நோக்கற்ற அமைப்பான “வி ஆர் நாட் நம்பர்ஸ்” இன் நிறுவனர்களில் ஒருவர் ஆவார். இது உலகெங்கிலும் உள்ள எழுத்தாளர்களுடன் காசாவில் உள்ள இளைஞர்களுடன் இணைந்து செயற்படுகிறது.
தற்போது சமூக ஊடகங்களில் அஞ்சலி செலுத்தும் முன்னாள் மாணவர் ஜெஹாத் அபுசலீம், அலரீரை “வகுப்பறைக்கு அப்பால் தனது மாணவர்களைப் பற்றி உண்மையிலேயே அக்கறை கொண்டிருந்த ஒரு வழிகாட்டி மற்றும் நண்பர் என்று விவரித்தார்.
காசா பல்கலைக்கழகத்தை இஸ்ரேல் அழித்தது:  
பாலஸ்தீனிய – அமெரிக்க எழுத்தாளரும் ஆர்வலருமான சூசன் அபுல்ஹாவா சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட வீடியோவில், “நான் சந்தித்த கனிவான, மிகவும் தாராளமான, அர்ப்பணிப்புள்ள, அற்புதமான மனிதர்களில் ஒருவர்” என்று அவர் விவரித்தார்.
நவம்பர் 1 ஆம் தேதி ட்விட்டரில் பதிவிடப்பட்ட ஒரு கவிதையில், அலரீர் எழுதினார்: “நான் இறக்க வேண்டும் என்றால், அது நம்பிக்கையைத் தரட்டும், அது ஒரு கதையாக இருக்கட்டும்”. இந்த பதிவு பல்லாயிரக்கணக்கான முறை பகிரப்பட்டது.
அக்டோபர் 11 அன்று அலரீர் கற்பித்த பல்கலைக்கழகத்தை இஸ்ரேல் அழித்தது. இது காசாவில் உள்ள ஒரு முக்கியமான ஹமாஸ் செயல்பாட்டு, அரசியல் மற்றும் இராணுவ மையம் என்று கூறியது.
புகழ்பெற்ற பாலஸ்தீனக் கவிஞரும், காசாவிலுள்ள பல்கலைக்கழகப் பேராசிரியருமான ரிவாட் அலாரீர் (Refaat Alareer) கடந்த புதன் இஸ்ரேல் காசா மீது நடத்திய குண்டுத்தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டமைக்கு உலகம் வாழ் கவிஞர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More