Saturday, May 18, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கொழும்பில் இரு பிள்ளைகளின் தாய் அடித்துக்கொலை!

கொழும்பில் இரு பிள்ளைகளின் தாய் அடித்துக்கொலை!

1 minutes read
இரத்தக் காயங்களுடன் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு, கடுவலைவில் வீட்டில் இருந்தே சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கடுவலை நகரில் பணிபுரிந்து வரும் அஜந்தா என்ற 51 வயதுடைய 2 பிள்ளைகளின் தாயாரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அவரது கணவர், மகள் மற்றும் மகன் ஆகியோர் காலையில் வேலைக்குச் சென்ற நிலையில், மேற்படி பெண் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

இந்நிலையில், சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் தலையின் பின்புறத்தில் பலத்த காயம் மற்றும் அவரது முகத்தில் கீறல்கள் உள்ளன என்றும், அவர் அணிந்திருந்த தங்க ஆபரணங்களும் காணாமல்போயுள்ளன என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேற்படி பெண் வழமையாக முற்பகல் 11 மணியளவில் வேலைக்குச் செல்பவர் என்றும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

வீட்டில் திருடுவதற்காக வந்த யாரேனும் தாக்கியதால், அந்தப் பெண் உயிரிழந்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்னர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More