Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் இலங்கை அரசை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் எதிர்ப்பு போராட்டம்!

இலங்கை அரசை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் எதிர்ப்பு போராட்டம்!

1 minutes read

தமிழக மீனவர்களின் பல இலட்சம் மதிப்பிலான விசைப்படகுகளை அரசுடமையாக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், கச்சத்தீவு ஒப்பந்தத்தை இலங்கை அரசு மீறுவதை கண்டித்தும் ராமேஸ்வரம் மீனவர்களின் விசைப்படகுகளில் கறுப்புக் கொடி ஏற்றி போராட்டமொன்றை மேற்கொண்டுள்ளனர்.

மேலும், இம்மீனவர்கள் 11 வது நாளாகவும் மீன் பிடிக்க செல்லவில்லை என்பதுவும் குறிப்பிடதக்கது.

கடந்த  டிசம்பர் மாதம் இலங்கை கடற்படையால்  சிறை பிடிக்கப்பட்டு இலங்கை யாழ்ப்பாணம் காரைநகர் கடற்படை முகாமில் தங்க வைக்கப்பட்டு,  இலங்கை அரசால் விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் நேற்று சென்னை விமான நிலையம் சென்றடைந்தனர். ஆனால் மீனவர்களின் பல இலட்சம் ரூபாய் மதிப்பிலான நான்கு விசைப்படகுகளை இலங்கை அரசுடமை செய்வதாக இலங்கை ஊற்காவற்துறை நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவால் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் எனவும் இலங்கை அரசின் இந்த உத்தரவை திரும்ப பெற வேண்டும் எனவும் ராமேஸ்வரம் மீனவர்கள் கடும் கண்டணம் தெரிவித்தனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More