அமெரிக்க அதிபர் டிரம்ப், ராணுவ நடவடிக்கைகள் தொடர்பாக, தன்னிச்சையாக முடிவெடுக்கும் அதிகாரத்தை கட்டுப்படுத்தும் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு, நடப்பு முன்னெடுக்கப்படும் என, அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி தெரிவித்திருக்கிறார்.
நாடாளுமன்ற ஒப்புதலை பெறாமல், டிரம்ப் நிர்வாகம் தன்னிச்சையாக எடுத்த முடிவை கவலையோடு பார்ப்பதாகவும், நான்சி பெலோசி கூறியிருக்கிறார்.
ஈரான் ராணுவ தளபதி குவாசிம் சுலைமானி அண்மையில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, வளைகுடா நாடுகள் உள்ளிட்டவற்றில், அமெரிக்கர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக மாறியிருக்கிறது. இதனை கருத்தில் கொண்டும், அமெரிக்கர்களின் பாதுகாப்பே முதன்மையானது என்பதை அடிப்படையாக வைத்தும், மக்கள் பிரதிநிதிகள் அவையில் தீர்மானத்தை தாக்கல் செய்து இயற்ற உள்ளதாக நான்சி பெலோசி தெரிவித்திருக்கிறார்.