எவ்வித நிபந்தனைகளுமின்றி ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தயார் என அமெரிக்கா அறிவித்துள்ளது.
ஈரானின் முக்கிய இராணுவத் தளபதியின் கொலையை நியாயப்படுத்தி அமெரிக்காவினால் ஐக்கிய நாடுகள் சபைக்கு கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளது.
இதில் தற்காப்பிற்காக இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக சுலைமானியின் கொலையை அமெரிக்கா நியாயப்படுத்தியுள்ளதுடன் சர்வதேச சமாதானம் மற்றும் பாதுகாப்பு கருதி ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தயார் என அமெரிக்கா அதில் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, அவுஸ்திரேலியாவில் ஊடகவியலாளர் மாநாடு இடம்பெற்றது.
இதன்போது, அமெரிக்கா – ஈரான் இடையில் தொடரும் பதற்றத்திற்கு மத்தியில் அவுஸ்திரேலியப் படைகள் மீளப்பெறப்படுமா என அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிஸனிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த அவுஸ்திரேலிய பிரதமர், அவுஸ்திரேலியப் படைகள் மீளப் பெறப்பட மாட்டாது என தெரிவித்துள்ளார்.