Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா மதுபான ஆலையில் துப்பாக்கி சூடு 6 பேர் பலி.

மதுபான ஆலையில் துப்பாக்கி சூடு 6 பேர் பலி.

1 minutes read

மதுபான ஆலையில் புகுந்து ஒருவன் துப்பாக்கியால்  சுட்டதில் 6 பேர் உயிரிழந்தனர்.

அமெரிக்காவின் மில்வாக்கி நகரில் இச் சம்பவம் பதிவாகி உள்ளது. மால்சன் கூர் வளாகத்தில் நிமிடத்திற்கு ஆயிரக்கணக்கான பீர் பாட்டில்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. இங்கு சுமார் 600 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இந்நிலையில், அங்கு திடீரென உள்ளே புகுந்த நபர் சரமாரியாக சுட்டுத் தள்ளினான்.

இதில் பலர் ரத்தவெள்ளத்தில் மிதந்தனர். ஊழியர்களுக்கு குறுஞ்செய்தி மூலமும் இமெயில் மூலமும் எச்சரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து நூற்றுக்கணக்கானோர் பாதுகாப்பாக இருக்க ஒரு அறையில் அடைக்கப்பட்டனர். போலீசார் துப்பாக்கியால் சுட்ட நபரை விரட்டிச் சென்று வேட்டையாடி வீழ்த்தினர்.

அந்த இடத்திற்கு போலீசார் விரைந்ததுடன் ஆம்புலன்சுகளும் தீயணைப்பு வாகனங்களும் வரவழைக்கப்பட்டன. இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More