0
கொரோனா அச்சத்தால் பெரும்பாலான IT நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களை வீட்டிலிருந்தே பணிபுரியுமாறு உத்தரவிட்டுள்ளன. பிரபல சமூக வலைத்தளங்களான பேஸ்புக், கூகுள், டுவிட்டர் ஆகியவையும் இவ்வாறு உத்தரவிட்டுள்ளன.
இந்தநிலையில், கொரோனா வைரஸ் சார்ந்த பிரச்சினைகளை எதிர்கொள்ள தங்களின் ஊழியர்களுக்கு $1,000 ( சுமார் ஒரு லட்சத்தி 80 ஆயிரம் ரூபா ) தொகையை போனசாக வழங்கப்படும் என பேஸ்புக் நிறுவனத்தின் CEO மார்க் சக்கர்பெர்க் அறிவித்துள்ளார்.
இந்த போனஸ் தொகை பேஸ்புக் நிறுவனத்தில் முழுநேரமாக பணிபுரியும் 45 ஆயிரம் பேருக்கு வழங்கப்படவுள்ளது.
கொரோனா பாதிப்பு தொடர்பான செய்திகளை முறையாக பொறுப்புணர்வுடன் பதிவு செய்ய லோக்கல் மீடியா அசோசியேஷன் மற்றும் லென்பெஸ்ட் ஊடகக் கல்வி நிறுவனத்துடனும் பேஸ்புக் நிறுவனம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதனடிப்படையில் அந்நிறுவனங்களுக்கு பேஸ்புக் சார்பில் $1 Million நிதி வழங்கப்படுகிறது.
வணக்கம் லண்டனுக்காக – ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்