கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் முகமாக 30 நாட்களுக்கு ஊரடங்கு சட்டம் மத்திய அமெரிக்க நாடான எல் சல்வடோரில் அமுல்படுத்தப்பட்டுள்ளது. அந்நாட்டு ஜனாதிபதி நயீப் புக்கேலே நேற்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ளார்.
இதேவேளை, அந்நாட்டுப் பிரஜைகள் மட்டுமே நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள். அனைத்துப் பாடசாலைகளும் மூன்று வாரங்களுக்கு இடைநிறுத்தப்படும். மேலும் 500 பேர் அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் கூடும் கூட்டங்கள் அடுத்த 21 நாட்களுக்கு நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
எல் சல்வடோரில் இதுவரை கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பான உறுதிப்படுத்தப்பட்ட வழக்குகள் எதுவும் இல்லை என்றாலும் 56 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உலகம் முழுவதையும் அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தாக்கம் சீனாவைத் தாண்டி ஐரோப்பா, மத்திய கிழக்கு, அமெரிக்காவிலும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது.