Sunday, May 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா ரோச் மருந்து நிறுவனம் கொரோனாவுக்கான தடுப்பு ஊசியை கண்டுபிடித்து விட்டதா?

ரோச் மருந்து நிறுவனம் கொரோனாவுக்கான தடுப்பு ஊசியை கண்டுபிடித்து விட்டதா?

1 minutes read

உலகத் தரம் வாய்ந்த சுவிட்ஸ்ர்லாந்த்தின் மருந்து நிறுவனமான ரோச் ( Roche ) கொரோனா வைரஸூக்கு தடுப்பு ஊசியை கண்டுபிடித்து விட்டதாக வட்ஸ் அப்பில் உலா வரும் செய்தியின் உண்மைத் தன்மையை பார்ப்போம்.

உலக வரலாற்றிலேயே கொரோனா வைரஸப் போல் மக்களை பீதிக்குள்ளாக்கிய தொற்று நோய் எதுவும் இருக்க முடியாது எனும் அளவுக்கு நிலைமை உலகம் பூராகவும்
கைமீறி போய் விட்டது. இந்நிலையில் கொரோனா நோய்த் தொற்று பரவும் காலங்களில் அதை விட வேகமாக வதந்திகளும், தவறான செய்திகளும் பரவி விடுகிறது. அந்த வகையில், கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பு ஊசியை பிரபல ரோச் மருந்து நிறுவனம் கண்டுபிடித்து விட்டதாக சில நாட்களாக வட்ஸ்அப்பில் தகவலொன்று உலா வருகிறது. இந்த தடுப்பு ஊசியை போட்ட 3 மணித்தியாலத்தில் அந்த தடுப்பு மருந்து கொரோனாவை கட்டுப்பாட்டில் வைப்பதாக அந்த போர்வேர்ட் ( Forwarded ) மெஸேஜில் கூறப்பட்டுள்ளது.

இந்த தடுப்பு ஊசி வருகிற எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் உலகெங்கும் விற்பனைக்கு வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருப்பதாக அந்த மெஸேஜில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்த தகவல் அனைத்தும் முழுக்க முழுக்க பொய்யான ஒன்றாகும். இதுபோன்ற அறிவிப்பு எதையும் அமெரிக்கா ஜனாதிபதி வெளியிடவில்லை.

கொரோனா வைரஸிற்கான நோயறிதலுக்கான பரிசோதனையை மேற்கொள்ள மட்டுமே ரோச் நிறுவனத்திற்கு அவசரமாக அமெரிக்கா ஜனாதிபதியால்
அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனோ வைரஸ் தடுப்பூசிக்கான அனுமதியல்ல என்று தெரியவந்துள்ளது.

வணக்கம் லண்டனுக்காக ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More