அமெரிக்காவின் உதவியுடன் இஸ்ரேலுடன் உறவகளை மேம்படுத்தும் இருதரப்பு ஒப்பந்தத்தில் கையொப்பமிட மற்றொரு அரபு நாடான மொராக்கோ இன்று ஒப்புக் கொண்டுள்ளது.
இந்நலையில், கடந்த நான்கு மாதங்களில் இஸ்ரேலுடன் விரோதப் போக்கை விலக்கிக் கொண்ட நான்காவது அரபு நாடாக மொராக்கோ வரலாற்றில் பதிவாகியுள்ளது.
இதற்கு முன்னர், ஐக்கிய அரபு இராச்சியம், பஹ்ரைன் மற்றும் சூடான் ஆகிய நாடுகள் இஸ்ரேலுடன் அமெரிக்கா தலைமையில் நட்புறவை ஏற்படுத்தியிருந்தன.
இதேவேளை, மேற்கு சஹாரா பகுதி குறித்து மொராக்கோவுடன் பல தசாப்தங்களாக பிராந்திய சர்ச்சை நிலவி வருகின்றது.
இந்நிலையில், மொராக்கோவுடனான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மேற்கு சஹாரா மீதான மொராக்கோவின் இறையாண்மையை அங்கீகரிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.
இதேவேளை, இன்று மற்றொரு வரலாற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இந்த ஒப்பந்தம் குறித்து தனது ருவிற்றர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
“எங்கள் இரு பெரிய நண்பர்களான இஸ்ரேலும் மொராக்கோ இராச்சியமும் முழு இராஜதந்திர உறவுகளுக்கு ஒப்புக் கொண்டுள்ளமை மத்திய கிழக்கில் அமைதிக்கான பாரிய முன்னேற்றம் என்று தெரிவித்துள்ளார்.