வவுனியாவில் மேலும் 16பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று நேற்று (புதன்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
பயங்கரவாத தடைப்பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்ட ஒருவருக்கு நேற்று முன்தினம் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்ட ஏனையவர்களிற்கு பி.சி.ஆர்.பரிசோதனை முன்னெடுக்கப்பட்டு, முடிவுகள் நேற்று வெளியாகியிருந்தன.
இதனடிப்படையிலேயே பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்ட 16 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை நாளையதினம் பயங்கரவாத தடுப்பு பிரிவினருக்கு பி.சி.ஆர்.பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.