செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் இந்திய தம்பதி உள்ளிட்ட 4 பேர் கனடாவில் பலி

இந்திய தம்பதி உள்ளிட்ட 4 பேர் கனடாவில் பலி

0 minutes read

கனடாவின் ஒன்டாரியோ பாமன்வில்லே நகரில் உள்ள மதுபானக் கடையில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற கொள்ளையுடன் தொடர்புடைய சந்தேக நபரை பிடிப்பதற்காக பொலிஸார் வாகனத்தில் துரத்தினர்.

அப்போது சந்தேக நபர் பயணித்த வேன் நெடுஞ்சாலையில் தவறான பாதையில் அதிவேகமாக சென்றது. அப்போது, சரக்கு வேன், எதிரே வந்த வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது.

அடுத்தடுத்து 6 வாகனங்கள் மோதியதால் அந்த சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

இந்த விபத்தில், ஒரு காரில் இருந்த இந்திய தம்பதி, அவர்களின் 3 மாத பேரக்குழந்தை மற்றும், சரக்கு வேனில் சென்ற சந்தேக நபர் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

அதே காரில் பயணித்த குழந்தையின் பெற்றோர் பலத்த காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து தொடர்பாக சிறப்பு புலனாய்வு பிரிவு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More