எல்லாமே எதுகுமே
கொஞ்சக் காலம் தான்
இதுக்காக மனிதருக்குள்
இத்தனை பிரிவா
இத்தனை அழிவா
இருப்பதெல்லாம்
போகும் என்று
அறியவில்லையா
இதற்கு தான
ஆசைப்பட்டாய்
மனிதா
வந்த சொத்து
இருக்கும் என்று
கனவு கண்டாய்
அது வரும் வழியே
போகும் என்று
அறியவில்லையா
அண்டமும் அகிலமும்
கொஞ்சக் காலம் தான்
அது சுத்துவதும் சுழலுவதும்
கொஞ்சக் காலம் தான்
ஆசை பாசம்
எல்லாம் கூட
கொஞ்சக் காலம் தான்
மூச்சு அடங்கிக் போனா
அது சும்மா வேஷம் தான்
நிரந்தரமே எல்லாம்
என்று நினைத்திருந்தாயா
இந்த உசிரு கூட
உனக்கு சொந்தம்
கொஞ்சக் காலம் தான்
முதுமை என்று
வந்து விட்டால்
முழுதும் அடங்கும்
அட போகும் போது
கூட வரும் நாலு தடி தான்
வந்த வழி தெரிகிறது
போக வழி இல்லை
எந்த வழி போவதென்று
இன்னும் குழப்பம் தான்
பாசமும் பணமும் கூட
நிரந்தரமில்லை
இது பகல் இரவு போல வரும்
காலம் போலத் தான்
எல்லாமே தெரிந்தவர் போல்
சில மனிதர் பேசுவார்
எதுகுமே தெரியாதென்ற
சூத்திரம் அறியார்
எல்லாமே எதுகுமே
கொஞ்சக் காலம் தான்
நமக்கு இருப்பதெல்லாம்
கொஞ்சக் காலம் தான்
அட நாம கூட
கொஞ்சக் காலம் தான்
அந்த நாடகத்தில்
நம்ம வாழ்வு
கொஞ்சக் காலம் தான்
இது போகு மட்டும் ஆடுவது
நம்ம வாழ்வு தான்
இதை போட்டு
உடைத்து வாழுவதும்
நம்ம வாழ்வு தான்.
பா.உதயன் ✍️