0
வென்னப்புவ பகுதியில் கோழிகளை வேட்டையாடி வந்த மீன்பிடிப் பூனை ஒன்று நேற்று காலை பொறியில் சிக்கியதை அவதானித்த அப்பகுதி மக்கள் புத்தளம் வனஜீவராசிகள் திணைக்கள கட்டுப்பாட்டுப் பிரிவருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து அப்பகுதிக்கு வனஜீவராசிகள் கட்டுப்பாட்டுப் பிரிவினர் சென்று பொறியில் சிக்கியிருந்த மீன்பிடி பூனையை உயிருடன் மீட்டு புத்தளம் தப்போவ சரணாலயத்தில் விடுவித்ததாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.