இலங்கைக்கு எதிராக இந்தியா ஒருபோதும் செயற்படாது.ஜெனிவா விவகாரத்தில் இந்தியா இலங்கைக்கு ஆதரவளிக்கும். அதற்கான அவசியமும் காணப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை வரையறைக்குட்பட்டு செயற்பட வேண்டும்.
நாட்டின் உள்ளக விவாரத்தில் தலையிடவும்.இலங்கைக்கு எதிராக செயற்படவும் மனித உரிமை ஆணையாளருக்கு அதிகாரமில்லை என பொதுஜன பெரமுனவின் தவிசாளர் , கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீறிஷ் தெரிவித்தார்
பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்று திங்கட்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.