0
ஈராக் மற்றும் சிரியாவைச் சேர்ந்த இஸ்லாமிக் ஸ்டேட் பயங்கரவாதிகளின் டிவிட்டர் பக்கங்களை முடக்கிய டிவிட்டர் ஊழியர்களை கொல்வோம் என்று பயங்கரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர்.
எங்கள் டிவிட்டர் பக்கங்களை முடக்கிய ஊழியர்களை ஸ்லீப்பர் குழுவினர் குறி வைத்து, டிவிட்டர் அலுவலக வாசலிலேயே ஓநாய் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர். ஓநாய் தாக்குதலில் ஒன்று அவர்கள் கொலை செய்யப்படுவர், அல்லது முடமாக்கப்படுவார்கள் என்று பயங்கரவாதிகள் மிரட்டல் செய்தியில் கூறியுள்ளனர்.