தேவையானவை :
தேங்காய் துருவல்- 1 கப்,
அரிசி- 4 ஸ்பூன்,
நெய்- 2 ஸ்பூன்,
ஏலப்பொடி- 1 ஸ்பூன்,
முந்திரி,
திராட்சை – தலா 10,
வெல்லப்பொடி – 1 கப்.
செய்முறை:
முதலில் அரிசியை அரை மணி நேரம் ஊறவைத்துக் களைந்து, பின் தேங்காய் துருவலுடன் சேர்த்து மிக்ஸியில் நன்கு நைஸாக அரைத்துக் கொள்ளவும். அரைத்த விழுதில் 1 கப் நீர் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். கை விடாமல், மிதமான தீயில் வைத்துக் கிளற வேண்டும். அரிசி வெந்ததும், வெல்லப்பொடி சேர்த்துக் கிளறி வெல்ல வாசனை போனதும் இறக்கி வைத்து, ஏலப்பொடி சேர்க்கவும். நெய்யில் திராட்சை, முந்திரியை வறுத்துச் சேர்க்கவும். இதுவே அரிசி தேங்காய் பாயசம். அம்பாளுக்கு மிகவும் பிடித்த ஒன்றாகும்.
நன்றி-தினகரன்