இலங்கையில் மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்களுடன் வழிபாட்டுதலங்களில் சமய அனுஸ்டானங்களை முன்னெடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, சமய அனுஸ்டானங்கள் மற்றும் விசேட வழிபாடுகளுக்கான தினங்களில் நேற்று முதல் 50 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் குறித்த சந்தர்ப்பங்களில் உரிய சுகாதார வழிகாட்டல்கள் பின்பற்றப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏனைய நாட்களில் தனித்தனியாகச் சென்று மக்கள் வழிபாட்டு நடவடிக்கைகளில் ஈடுபட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.