பயங்கரவாதம் வேரோடு அழிக்கப்படும் என்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், அவரது இல்லத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் குழுவுடன் பேசுகையில், தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருவதாகவும், அரசு பயங்கரவாதத்தின் அச்சுறுத்தை குறைக்கும் என்று கூறினார். பயங்கரவாதத்தை அடியோடு அகற்றுவதிலே பாகிஸ்தான் அரசு கவனம் செலுத்துகிறது, பயங்கரவாதத்தை அழிக்க வேண்டும் என்பதில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒரே அணியில் திரண்டுள்ளன. இது பயங்கரவாதத்தை வெளியேற்ற உதவியாக இருக்கும். என்று நவாஸ் ஷெரீப் தெரிவித்தார்.
பெஷாவர் பள்ளியில் தலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு அரபு இளவரசர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இரங்கலையும் தெரிவித்துள்ளார். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்திற்கு உதவி செய்வதாக அறிவித்துள்ளது. பாகிஸ்தானில் பெஷாவர் நகரில் உள்ள ராணுவ பள்ளிக்கூடத்தில், தலீபான் தீவிரவாதிகள் 6 பேர் புகுந்து, 132 குழந்தைகள் உள்பட 148 பேரை கொன்று குவித்தது உலகமெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பெஷாவர் பள்ளிக்கூட தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தானில் தீவிரவாதிகளை ஒழித்துக்கட்டும் நடவடிக்கையை நவாஸ் ஷெரீப் அரசு முடுக்கி விட்டுள்ளது.