நாஸா உள்ளிட்ட அமெரிக்க ஆய்வு நிறுவனங்களின் புள்ளிவிவரப்படி 2014-ஆம் ஆண்டுதான் அதிக வெப்பம் மிகுந்த ஆண்டாகும்.
1880-ஆம் ஆண்டிலிருந்து புவியின் சராசரி வெப்பம் 0.8 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளது. கடந்த 30-லிருந்து 40 ஆண்டுகளில் புவி வெப்பமயமாதல் அதிக அளவில் நிகழ்ந்துள்ளது.
நியூயார்க்கிலுள்ள நாஸாவின் கட்டார்டு விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், தேசிய கடல் பரப்பு ஆய்வு மையம் ஆகிய அமைப்புகள் இந்த ஆய்வை மேற்கொண்டன.
கடல் பரப்பு வெப்ப நிலை, அண்டார்க்டிக் ஆராய்ச்சி நிலையத் தகவல்கள், உலகெங்கும் உள்ள 6,300 வானிலை மையங்கள் ஆகியவற்றின் மூலம் பெற்ற தகவல்களின் அடிப்படையில் ஆய்வு நடைபெற்றது.
இதில், கடந்த 2014-ஆம் ஆண்டுதான் மிகவும் வெப்பமான ஆண்டு எனத் தெரியவந்துள்ளது.