போராட்டத்தின்போது பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் கழுத்தைப் பிடித்து அச்சுறுத்திய சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியை சேவையிலிருந்து உடனடியாக இடைநிறுத்துமாறு பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க இன்று (14) தெரிவித்தார்.
மக்களைக் காக்க வேண்டிய சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி, ஒரு பெண் பொலிஸ் உத்தியோகத்தரை மிகவும் விரும்பத்தகாத மற்றும் அவமானகரமான முறையில் கழுத்தைப் பிடித்து அச்சுறுத்திய செயலுக்கு தாம் மிகவும் வருந்துவதாகவும் இந்தச் செயலை கண்டிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது பொலிஸ் சேவையில் சுமார் 9,000 பெண்கள் கடமையாற்றி வருவதாகவும், தாய்மார்கள் இவ்வாறானவற்றை எதிர்பார்த்து தமது பெண் பிள்ளைகளை பொலிஸ் சேவைக்கு அனுப்புவதில்லை எனவும் அவர் தெரிவித்தார்.