உலகளவில் அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடி காரணமாக டுவிட்டர், கூகுள் மற்றும் மெட்டா உள்ளிட்ட பல்வேறு முன்னணி நிறுவனங்கள் அண்மைக்காலமாக தமது ஊழியர்களைப் பணி நீக்கம் செய்து வருகின்றன.
குறிப்பாக கூகுள் நிறுவனமானது சமீபத்தில் 1,200 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்திருந்தது.
இந்நிலையில், அந்நிறுவனமானது தற்போது தனது நிறுவனத்தின் சிற்றுண்டிச்சாலைகளில் பணியாற்றி வரும் ரோபோக்களையும் பணிநீக்கம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செலவு குறைப்பு நடவடிக்கைகளில் ஓர் அங்கமாகவே குறித்த ரோபோக்கள் பணி நீக்கம் செய்யப்படுவதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.
கொரோனா பெருந்தொற்று முடக்கங்களின் போது, இவ்வகை ரோபோக்கள் மிகச் சிறந்த சேவையை வழங்கியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.