நுவரெலியா- கொட்டகலை பகுதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான், மஹிந்த – கோட்டாபய ஆகியோரினால் மட்டுமே நாட்டில் புதியதொரு மாற்றம் ஏற்படுமென தெரிவித்துள்ளார்.
மேலும் குறிப்பிட்ட இவர் நுவரெலியா – மஸ்கெலியா தேர்தல் தொகுதியில் மொட்டு சின்னத்தை வெற்றிப்பெற வைக்கும்போது பாரிய அபிவிருத்திகளை நாம் எதிர்பார்க்க முடியும் என்றுகுறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் நாம் வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றக்கூடியவர்கள் பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுமே என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த திட்டம், எதிர்காலத்தில் எமது பிள்ளைகள் பயன்பெற கூடிய ஒன்றாக அமையும். அந்தவகையில் நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் தாமரை மொட்டு சின்னத்திற்கு வாக்களித்து அவர்களை வெற்றிபெறச் செய்ய வேண்டும்எனத்தெரிவித்துள்ளார்.