0
ஒரு ஒளிப்படம் ஓர் ஆயிரம் செய்திகளைச் சொல்லும் என்பர். அவ்வாறே யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஒளிப்பட காண்பியல் நிகழ்வு, தமிழர்களின் போரையும் போர்தின்ற வாழ்வையும் வெளிக்காட்டிய நிகழ்வாக இடம்பெற்றுள்ளது. யாழ் மத்திய கல்லூரிக்கு அருகைமையில் உள்ள தந்தை செல்வா அரங்கில் கடந்த 22ம் திகதி யாழ் புகைப்படத் திருவிழா எனும் பெயரில் தொடங்கிய இந்நிகழ்வு 25ம் திகதி வரை இடம்பெறுகின்றது.
தமிழர் தாயகத்தில் ஒளிப்படத்துறை ஊடகவியலில் ஈடுபட்டு வருகின்ற ஒளிப்படவியலாளர்களது ஒளிப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
குறிப்பாக போரின் ஓய்வுக்கு பிந்திய நிலையில், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளது நீதிக்கான போராட்டம், ஆக்கிரமிப்பு புறநிலை, மக்களின் வாழ்நிலை என சமூகத்தின் பல்வேறு கிடக்கைகளை ஒளிபடங்கள் காலத்தின் சாட்சியாக ஆவணப்படுத்தியுள்ளன என்பது இங்கு குறிப்பிடதக்கது.