யாழ்ப்பாணம், சங்கிலிய மன்னனின் மந்திரிமனை பராமரிப்பு இன்றி காணப்படும் அவல நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
இரண்டாம் சங்கிலியன், யாழ்ப்பாணத்தின் அடையாளமாக வராலாற்றுப் பதிவுகள் கூறுகின்ற நிலையில் அதற்கான அடையாளச் சின்னங்களாக யாழ்ப்பாணம் முத்திரைச் சந்தியில் சங்கிலியன் சிலையும் அதனருகில் யமுனா ஏரி, சங்கிலியன் தோப்பு மற்றும் மந்திரி மனை என்பனவும் காணப்படுகிறன.
இதில் மந்திரி மனை தவிர்த்த ஏனைய சின்னங்கள் தொல்பொருள் திணைக்களம் மற்றும் யாழ்.மாநகரசபையினால் அடையாளப்படுத்தி பெயர் பலகை நிறுவப்பட்டுள்ளன.
இந்நிலையில் மந்திரி மனையானது தொல்பொருள் திணைக்களம் மற்றும் மாநகர சபையின் எந்தவொரு அடையாளப்படுத்தலும் இல்லாமல் பராமரிப்பும் இன்றி காணப்படுகிறது.
ஏற்கனவே தொல்பொருள் சின்னம் என அடையாளப்படுத்தப்பட்ட பெயர்ப் பலகை ஒன்று நிறுவப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்த பெயர்பலகையும் சேதப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு யாழ்.மண்ணின் வரலாற்றுச் சின்னம் அழிவதற்கு முன்னர் சம்பந்தபட்ட தரப்பினர் விரைந்து நடவடிக்கை எடுத்து மந்திரி மனையைக் காக்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.