நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் தொற்று கண்டறியப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை இரண்டாயிரத்து 943ஆக அதிகரித்துள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்கள் குவைத்தில் இருந்து நாடு திரும்பியவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, இந்த வைரஸ் தொற்றிலிருந்து மேலும் ஒன்பது பேர் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளதுடன் தொற்றிலிருந்து மீண்டோரின் எண்ணிக்கை இரண்டாயிரத்து 798ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், மேலும் 134 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
கொரோனா தொற்றுக்குள்ளாகி இலங்கையில் இதுவரை 11 பேர் மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.