கைது செய்யப்பட்ட போதைப்பொருள் கடத்தல் காரரான ´குடு அஞ்சு´வின் சகோதரி உட்பட நான்கு பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளர்.
அவர்களை எதிர்வரும் 28 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிஸ்ஸ மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாதாள உலகக் குழு உறுப்பினர் ´ரத்மலான ரொஹா´ கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து அதனை கொண்டாட முற்பட்ட காரணத்தால் அவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அண்மையில் கொலை செய்யப்பட்ட ´குடு அஞ்சு´வின் சகோதரரான ´லங்சியா´ வின் சடலம் அடக்கம் செய்யப்பட்ட தெஹிவளை கல்கிசை நகர சபை பொது மயானத்தில் இந்த கொண்டாட்ட நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
ட்ரோனர் கெமராவை பயன்படுத்தி ´லங்சியா´வின் சடலம் அடக்கம் செய்யப்பட்டிருந்த இடத்திற்கு மேலே இருந்து மலர் தூவுவதற்கும் அவர்கள் ஏற்பாடுகளை செய்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பில் லங்சியா என்பவரின் இளைய சகோதரி, குடு அஞ்சுவுடன் வட்-அப் தொடர்பில் இருந்த நபர் ஒருவர் மற்றும் மலர் தூவுவதற்கு தயாராய் இருந்த ஒருவர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.