இப்பவெல்லாம்
ஒரு பெண் உருக்குலையும் போது
யாரோ ஒரு பெண்ணென்றுதான்
அப்பால் அகல்கின்றனர்
இப்பவெல்லாம்
ஒரு பெண் உருக்குலையும் போது
யாரோ ஒரு பெண்ணென்றுதான்
அப்பால் அகல்கின்றனர்
ஒரு பிரபாகரனின் அருமை
ஒரு பூலான்தேவியின் அருமை
இப்போதுதான் எவருக்கும்
புரிய ஆரம்பிக்கின்றன..!
இனி
இன்னும் இன்னும்
எத்தனை எத்தனையோயோ
தெரியவில்லை…?
அவர்களில் ஒருவர்
என் மனைவியாக,
என் மகளாக,
என் சோதரியாக,
என் அம்மாவாக
என யாராகவும் இருக்கக்கூடும்
என யாருமே நினைப்பதில்லை…
சமாளித்து வாழ்பவரை
சரியானவர் என்றும்
சுட்டிக்காட்டி வாழ்பவரை
சரியில்லாதவர் என்றும்
மட்டம் செய்து தேய்ந்து போகிறது உலகு..!
“சமாளித்து வாழ்தல்” என்பது
வீழ்தலின் அடையாளமன்றி
வேறெதுவுமில்லை பராபரமே..!
-சமரபாகு சீனா உதயகுமார்