திருவள்ளூர் அருகே திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மொய் பணத்தை திருடிச் சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகச்சிக்கு வந்த நண்பர்கள், உறவினர்கள் பலர் மணமக்களுக்கு பரிசு, அன்பளிப்பு பணம் உள்ளிட்டவைகளை வழங்கினர். மணமக்கள் அவற்றை பெற்று உறவினர்களிடம் கொடுத்து வந்தனர்.
அப்போது உறவினர்கள் போல் அங்கு வந்த மர்மநபர் ஒருவர், மேடையில் மொய்ப்பணத்தை வைத்திருந்த உறவினர்களை, சாப்பிட்டு வருமாறு கூறி விட்டு, ஒரு லட்ச ரூபாய் மொய் பணத்தை திருடிக் கொண்டு தப்பியோடியுள்ளார்.
இதுகுறித்து திருமண வீட்டார் அளித்த புகாரையடுத்து, சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.