மாவீரர் தின நினைவேந்தல் காலத்தில், கப்டன் வாசு குறித்து வலைப்பதிவாளர் ஜூட் பிரகாஷ் எழுதிய அஞ்சலிக் குறிப்பை இங்கே மறுபிரசுரம் செய்கிறோம். வணக்கம் லண்டன் நிரூபர்
விடுதலைப் புலிகளின் தொழில்நுட்பப் பிரிவின் பொறுப்பாளராக இருந்தவர். எண்பதுகளின் மத்தியிலேயே புலிகளின் விமானத்தைத் தயாரித்து பறக்க விடும் முயற்சிகளில் ஈடுபட்டிருந்தவர்.
யாழ்ப்பாணம் பொம்மைவெளியில் புலிகளின் விமானம் ஒன்று பரீட்சார்த்தப் பயிற்சியில் பறந்ததாகவும் அந்தக் காலத்தில் ஒரு கதை உலாவியது. அந்தப் பரீட்சார்த்த பயிற்சி முயற்சியின் மூளை வாசு தான் என்றும் பேசப்பட்டது.
14 பெப்ரவரி 1987 அன்று நாவற்குழி இராணுவ முகாமை தாக்கும் திட்டத் தயாரிப்பின் போது ஏற்பட்ட தவறுதலான வெடி விபத்தில் பொன்னம்மான், கேடில்ஸ் உட்பட பிற போராளிகளோடு வீரமரணத்தைத் தழுவிக் கொண்டவர், அவருக்கு அப்போது 26 வயது தான்.
“ஊர் வாழ வேண்டும் என்ற
உன்னத ஆர்வம் கொண்டோர்!
ஏராளமான துயர்
எண்ணங்கள் தாங்கி நின்றோர்
மாவீரர் யாரோ என்றால்
மரணத்தை வென்றுள்ளோர்கள்!”