அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் மூத்த மகன் டொனால்ட் டிரம்ப் ஜூனியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த வாரத் தொடக்கத்தில் டொனால்ட் டிரம்ப் ஜூனியருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அது முதல் அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாக அவரது செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
42 வயதாகும் டிரம்ப் ஜூனியருக்கு கொரோனா அறிகுறி எதுவும் காணப்படவில்லை. அதே வேளையில் மருத்துவர்களின் அறிவுரைகளை முழுமையாகக் கடைபிடித்து வருகிறார் என்றும் கூறியுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பாக, டிரம்ப், அவரது மனைவி மெலானியா மற்றும் அவர்களது 14 வயது மகன் பாரோனுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சில நாள்கள் சிகிச்சையும் பெற்றனர். இந்த நிலையில், டிரம்ப்பின் முதல் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு தற்போது கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
நடந்து முடிந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், தனது தந்தைக்காக டிரம்ப் ஜூனியர் சூறாவளி சுற்றுப் பிரசாரம் மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.