இலங்கையில் 1000க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கொவிட் 19 ஒழிப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதன்படி, 1,039 பொலிஸ் அதிகாரிகளுக்கு இதுவரை கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நிலையம் தெரிவித்துள்ளது.
இதில், 238 பேர் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் எனவும் கொவிட் 19 ஒழிப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.
நாட்டில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 20 ஆயிரத்து 508 ஆக உயர்ந்துள்ளது.
இதில் 14 ஆயிரத்து 497 பேர் குணமடைந்துள்ளதுடன் 5 ஆயிரத்து 921 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவரும் அதேவேளை 90பேர் மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.