Saturday, April 27, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா சுகாசினியின் அந்தரம் நடன நிகழ்ச்சி சென்னையில் சுகாசினியின் அந்தரம் நடன நிகழ்ச்சி சென்னையில்

சுகாசினியின் அந்தரம் நடன நிகழ்ச்சி சென்னையில் சுகாசினியின் அந்தரம் நடன நிகழ்ச்சி சென்னையில்

1 minutes read

சுகாசினியின் டேலன்ட் சவுத் நிறுவனமும் பரத நாட்டியக் கலைஞர் கிருத்திகாவின் நமார்க்கம் நடன நிறுவனமும் இணைந்து, சென்னையில் ‘அந்தரம்‘ என்ற நடன நிகழ்ச்சியை நடத்துகிறது. வரும் 28ம் தேதி மியூசிக் அகாடமியில் இந்நிகழ்ச்சி நடக்கிறது. தமிழ்நாடு, கேரளா, ஆந்திர மாநிலங்களின் பாரம்பரிய கலையான, பரதம், மோகினி ஆட்டம், குச்சிப்பிடி ஆகிய நடனங்கள் இணைந்து, மூன்று தேவதைகளின் கதைகளைச் சொல்லும் முயற்சிதான் அந்தரம். அதன் பொருள் தூரம். கிருத்திகா சுப்ரமணியன் பரத நாட்டியம், கோபிகா வர்மா மோகினி ஆட்டம், யாமினி ரெட்டி குச்சுப்பிடி ஆட்டத்தில் முறையே ஆண்டாள், கண்ணகி மற்றும் வாசவியின் கதைகளை சொல்கிறார்கள். சுஹாசினி மணிரத்னம் நாடக மற்றும் நடன பாணியில் கர்நாடக மாநிலம் பீஜாப்பூரில் உள்ள கோல்கும்பஸ் மசூதியில் அடக்கம் செய்யபட்டு கொண்டாடப்படும் ரம்பா என்ற நடனப்பெண்ணின் கதையை சொல்கிறார். இயக்குனர் ஜெயேந்திராவின் மேற்பார்வையில் இந்நிகழ்ச்சி நடக்கிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More