இவர், மறைந்த நடிகர்கள் எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினிகணேசன், நாகேஷ், ஜெய்சங்கர், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சத்தியராஜ் என பல கதாநாயகர்களுக்கு தன் சொந்தக்குரலில் கடந்த 40 ஆண்டுகளாக பாடி திரையுலகில் ஆட்சி செய்தவர்.
1950-ம் ஆண்டு முதல் 1991-ம் ஆண்டு வரை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட 11 இந்திய மொழிகளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படப்பாடல்களும், 3 ஆயிரம் ஆன்மிக பாடல்களும் இவர் பாடி ரசிகர்களை கவர்ந்து உள்ளார்.
அவரை கவுரவிக்கும் வகையில் தற்போது தபால் தலை ஒன்றை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதற்கு, அவருடைய குடும்பத்தினர் சார்பிலும், ரசிகர்கள் சார்பில் மத்திய அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டு உள்ளது.