Saturday, May 11, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா மீண்டும் இந்தி திரைப்படத்தை இயக்கும் பிரபுதேவா

மீண்டும் இந்தி திரைப்படத்தை இயக்கும் பிரபுதேவா

1 minutes read

நடிகரும், இயக்குனருமான பிரபுதேவா, தற்போது “தபாங்” படத்தின் படப்பிடிப்பை இன்று முதல் தொடங்கியுள்ளார்.

தமிழ் சினிமாவில் நடன இயக்குனராகவும், முன்னணி நடிகராகவும் வலம் வருபவர் பிரபுதேவா. நடனம் என்றாலே தமிழ் ரசிகர்களின் மனதில் முதலில் நினைவுக்கு வருபவர் இவர்தான்.

நடிகர் விஜய்யை வைத்து “போக்கிரி” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் இவர், அதனைத் தொடர்ந்து தமிழில் வெற்றி பெற்ற போக்கிரி படத்தை ஹிந்தியில் சல்மான் கான் நடிப்பில் மருதயாரிப்பு செய்தார்.

அந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்நிலையில், சல்மான் கானும் பிரபு தேவாவும் மீண்டும் ஒரு படத்தில் இணையவுள்ளனர். தபாங் படத்தின் மூன்றாம் பாகமாக உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியது.

இந்நிலையில், இயக்குனர் ஏ.சி.முகில் இயக்கத்தில், பிரபுதேவா நடிப்பில் பொன் மாணிக்கவேல் படத்தின் பட விளம்பரம் அண்மையில் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் அவர்க்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார்.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More