Friday, April 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா கொரோனா வைரஸால் தாயின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள முடியா நிலையில் இர்ஃபான் கான்.

கொரோனா வைரஸால் தாயின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள முடியா நிலையில் இர்ஃபான் கான்.

1 minutes read

கடந்த 2018ம் ஆண்டு கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட இர்ஃபான் கான் லண்டனில் உயர்தர சிகிச்சைகளை மேற்கொண்டு கடந்த ஆண்டு மீண்டும் நடிக்க வந்தார்.

கடந்த சனிக்கிழமை இவரின் தாயார் சாயிதா பேகம், 95, ஜெய்ப்பூரில் வயது முதிர்வு காரணமாக உயிரிழந்தார்.

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் லாக்டவுன் போடப்பட்டுள்ளதால், ஜெய்பூருக்கு செல்ல முடியாத நிலையில், வீடியோ காலில் அழுத படி தாயின் இறுதி சடங்குகளை இர்ஃபான் கான் பார்த்தார்.

இந்நிலையில், திடீரென இர்ஃபான் கான் உடல்நலத்தில் மீண்டும் பின்னடைவு ஏற்பட்டதால், தற்போது மீண்டும் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More